Friday, December 28, 2007

கொஞ்சம் சீரியஸ்…..கொஞ்சம் காமெடி

நேற்று மாலை பேநசீர் புட்டோ சுட்டுக் கொல்லப்பட்டார். இது எல்லாருக்கும் தெரியும். ஆனா 5:30 மணிக்கு காரில் ஏறும்போது அவர் நினைத்திருப்பாரா இன்னும் 5 நிமிடத்தில் இற்க்கப்போவதை. சிரித்துக் கோண்டே அவர் படியில் இறங்கி வருவதை பார்க்கும் போது மனசுக்குக் நொன்ப கஷ்டமாக இருந்தது. என்ன பண்றது, மனுஷனோட வாழ்க்கை இப்படித்தானே இருக்கு. எப்போ என்ன நடக்குமுன்ண்னு யாருக்கும் தெரியாது. இது ஒரு வகையில நல்லதுன்னும் நினைக்கிறேன். ஒருவேளை தெரிஞ்சா வாழ்க்கை சுவையா இருக்காதுன்னு தோணுது. ரஜினி சொன்ன மாதிரி சாகற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாயிடும்.


சரி சீரியஸ் விஷயம் போதும். காமெடிக்கு வருவோம். சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படிச்சேன். படிச்சதும் எனக்கு சிரிப்புதான் வந்தது. என்ன தெரியுமா, நிலாவில் நிலம் வாங்கறதுதான். (நிலவில் நிலம்... கவிதையா இருக்கே... இதையே தலைப்பா வெச்சிருக்கலாமோ?)


இப்போ அமெரிக்காவில் இது ரொம்ப தீவிரமா நடக்குதாம். இணையத்தில் தேடிப் பார்த்தபோது இது ரொம்ப காலமா நடக்குறது தெரிய வந்தது. ஒரு ஏக்கர் $25 தான். சென்னையில் நிலம் வாங்குவதை விட ரொம்ப ரொம்ப மலிவு. நீங்க நிலம் வாங்கினா, அதுக்கான பட்டா, உங்க நிலத்தோட போட்டோ எல்லாம் தராங்களாம்.

இந்த இணையதளம்தான் அதிகார பூர்வ விற்பனையாளராம்.

யாரு இவங்களுக்கு அதிகாரம் குடுத்ததுன்னுதான் தெரியலை. நமக்கு சொந்தமான இடத்தைத் தானே நாம விற்க முடியும். இவங்க நிலாவில் இருக்கும் இடத்தை விற்கிறாங்களே.. அப்படின்னா மொத்த நிலாவும் இவங்களுக்கு சொந்தமாயிடுச்சா? அப்படின்னா இவங்களுக்கு யாரு நிலாவை வித்தது? இவங்களை மாதிரியே இன்னும் நிறைய பேரு விக்கிறாங்களே...அவங்களுக்கும் அதே நிலா சொந்தமா? எனக்கு எதுவும் புரியலை சாமி.




Friday, December 21, 2007

பேசுகிறேன் பேசுகிறேன்


பேசுகிறேன் பேசுகிறேன்

உன் இதயம் பேசுகிறேன்

புயல் அடித்தால் கலங்காதே -

நான் பூக்கள் நீட்டுகிறேன்


எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா....



கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

இளைப்பாற மரங்கள் இல்லை

கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ


முற்றுப்புள்ளி அருகில் நீயும்

மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்

முடிவென்பதும் ஆரம்பமே....


வளைவில்லாமல் மலை கிடையாது

வலியில்லாமல் மனம் கிடையாது

வருந்தாதே வா.....

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..


காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்

தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை

தன்னைக் காக்கவே தானாய் வளருமே


பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்

பெண்ணே கொஞ்ச நேரம்தானே

உன்னைத் தோண்டினால்

இன்பம் தோன்றுமே


விடியாமல்தான் ஓர் இரவேது

வடியாமல்தான் வெள்ளம் கிடையாது

வருந்தாதே வா...

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..


படம் : சத்தம் போடாதே

பாடல் : நா. முத்துக்குமார்

இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் : நேஹா பேசின்



சமீபமாக வந்த பாடல்களில் எனக்கு பிடித்தவற்றை உங்களோட பகிர்ந்துக்கலாமுன்னு நினைச்சேன். அதன் முதல் படி தான் இது. இந்த பாடலின் வரிகளுக்காகவே என்னைக் கவர்ந்த பாடல் இது..


பாட்டைக் கேட்க இங்க போகலாம்...

புகைப்படம் : http://outdoors.webshots.com/photo/2272177600087250223wWnUDC

Tuesday, August 14, 2007

India Day நிசமா??

இது எனக்கு இப்போதான் email-ல் வந்தது....வாஷிங்டனில் ஆகஸ்ட் 15ம் தேதியை இந்தியா நாள் (India Day)ன்னு அறிவிச்சிருக்காங்களாம். அதுக்கான வாஷிங்டன் மாகாண கவர்னரின் உத்தரவு இதுதானாம்.... நிசமான்னு தெரியலை.... தெரிஞ்சவங்க சொன்னா சந்தோஷமா இருக்கும்.... உண்மையா இருந்தால் ரொம்ப சந்தோஷம்.

வைரம் வைரம்

என்னோட கோடானு கோடி வாசகர்களுக்கு (!!!) (சரி சரி....இதெல்லாம் கண்டுக்காதீங்க :-))

இந்தியன் என்று சொல்லடா.... தலை நிமிர்ந்து நில்லடா.....

இது சுதந்திர தின வைர விழா......

சக இந்தியர் அனைவருக்கும்

இனிய சுதந்திர தின

வைர விழா வாழ்த்துக்கள்


Wednesday, July 18, 2007

ஙே !!!!!!!!

ஆமாங்க நான் இதைப் பார்த்த போது அப்படித்தான் முழிச்சேன்.

இந்த படத்தைப் பாருங்க...





Keyboard failiure.....
Strike F1 to continue, F2 to run setup utility.


என்ன சொல்லுறதுன்னே தெரியலை போங்க.... அதுதான் Keyboard failiure-ஆ இருக்கே... அப்புறம் எப்படி F1 / F2 தட்ட முடியும்?

Microsoft Rocks.......... chanceless...........

பி.கு : ஆமா இந்த படத்தை புகைப்பட போட்டிக்கு அனுப்பலாமோ????



Wednesday, July 4, 2007

உணர்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு நிமிடம் please

நீங்கள் சென்னையைச் சேர்ந்தவரா? உங்களுக்கு Computer realated services தேவைப்படுகிறதா? இதை ஒருநிமிஷம் படியுங்கள்....

நமது வெற்றிக்கு பின்னால் பலர் இருந்திருக்கிறார்கள்
சிலரது உயர்விற்காவது நாம் உதவியாய் இருப்போம்"

Tuesday, June 26, 2007

எட்டி 8டி பார்க்கிறேன்..எட்டுக்குள் நான்

எட்டுக்குள்ள நானும் இருக்கேன்....

அழைத்த சிவாக்கு நன்றி. என்னையும் ஒரு ஆளா மதிச்சு நீங்க கூப்பிட்டுருக்கறத நெனைச்சா புல்லரிக்குது.

ஆனா என்னைப் பத்தி பெருமையா சொல்லிக்கிற மாதிரி எட்டு விஷயம் எழுதறது எவ்வளவு கஷ்டமுன்னு எழுத தொடங்கியதும்தான் தெரியுது.
நம்மள பத்தி சொல்லிக்கிற மாதிரி எட்டு விஷயம் திரட்ட இன்னும் எட்டு வருஷம் ஆகும் போலிருக்கு... அப்புறம் மத்தவங்க எட்டு போட்டதை பார்த்து, சரி பெருமையான விஷயம்னு இல்லாம நம்மளை பத்தி எட்டு விஷயம் சொன்னாப் போதுமுன்னு நினைச்சு இந்த பதிவை எழுதுறேன். இதுக்கு முன்னாடி நான் இந்த மாதிரி சங்கிலி தொடர் விளையாட்டில் பங்கேற்றதில்லை. அதுனால, பதிவில் பிழையிருந்த நீங்க கொஞ்சம் கண்டுகிறாதீங்க... திரனா திரனா தன தன்னானே..... ஆஹா பாத்தீங்களா பதிவு எழுதிட்டிருக்கும்போதே பருத்தி வீரன் பாட்டுக்கு தாவிட்டேன். இதுதாங்க என்னைப் பத்தின முதல் விஷயம்.

இசையில்லாமல் நானில்லை. அது இதுன்னு குறிப்பிட்டு இல்லாம எல்லா விதமான இசையும் கேட்பேன். நான் என்ன வேலை செஞ்சுகிட்டு இருந்தாலும் பக்கத்தில இசை ஒலிச்சுக்கிட்டே இருக்கணும். இல்லாட்டி எனக்கு என்னவோ கையில்லாதது போல இருக்கும். கொஞ்சம் சுமாரா நல்லாவே பாடுவேன். பள்ளி நாட்களில் இருந்து தொடங்கி, கல்லூரி நாட்களிலும் பல விதமான பாட்டு போட்டிகளிலும் பங்கேற்று, எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு பரிசு கண்டிப்பா வாங்கிடுவேன். பின்னர் முதுகலை படிக்கும் போது கர்நாடக சங்கீதத்தின் மீது பயங்கர ஆர்வம் வந்து அதை முறைப்படி கற்றுக் கொண்டேன். இப்போ ஓரளவுக்கு கர்நாடக சங்கீதமும் தெரியும். ஆணி பிடுங்க தொடங்கியதில் இருந்து, கற்றுக் கொள்வது தடை பட்டாலும், இசை ஆர்வம் இன்னும் குறையவில்லை. என் மகனுக்கும் இசை ஆர்வம் இருக்கும் போல் தெரிகிறது சந்தோஷமா இருக்கு.

அடுத்தது படிக்கும் ஆர்வம். எப்போ பார்த்தாலும் ஏதாவது படிச்சுகிட்டே இருப்பேன். சாப்பிடும் போதும் கூட. ஆங்கில தமிழ் நாவல்கள் எல்லாம் படிப்பேன். குமுதம், விகடன் எல்லாம் படிப்பேன். அனேகமாக எல்லா வாரப் பத்திரிக்கைகளும் எங்கள் வீட்டில் இருக்கும். எல்லாவற்றையும் படிப்பேன். படிக்க புதிதாக எதுவும் இல்லைன்னா ஏற்கனவே படிச்ச புத்தகம் ஏதாவது எடுத்து மறுபடி படிப்பேன். (இது weird list-ல் இருக்கணுமோ?) மாசம் கணிசமான தொகை புத்தகங்களுக்குனே ஒதுக்கி வெச்சுடுவேன்.

இப்போ எழுத்தில் ஆர்வம் ஏற்பட்டிருக்கு. அதுதான் இந்த பதிவு எல்லாம். என் பதிவுகளை படிச்சுட்டு துளசி டீச்சர் நல்லா எழுத வந்திருச்சுன்னு சொன்னதை கண்டிப்பா பெருமையா நினைக்கிறேன். (அவங்க சும்மா ஒரு ஆறுதலுக்கு சொல்லியிருந்தாலும்.......). அதுமட்டும் இல்லாம என் பதிவுகளை தொடர்ந்து படித்து என்னை உற்சாகப் படுத்தும் என் நண்பர்கள், குறிப்பா சீதா. இவங்களால்தான் நான் இன்னும் தொடர்ந்து பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன். ( இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவங்க பாராட்டியிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்)

இது மட்டும் இல்லாமல் நான் வேலை பார்த்த ஒரு நிறுவனத்தில் நான் எழுதிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை (on unified Messaging) பாராட்டப் பட்டு மிகச்சிறந்ததாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. அது சிங்கப்பூர் அரசாங்க நிறுவனத்துக்காக தயாரிக்கப் பட்டதால், சிங்கப்பூர் அரசாங்கமும் பாராட்டு சான்றிதழ் வழங்கி, அது நாளிதழிலும் வெளியானது.

கல்லூரியில் இளங்கலை படிக்கும்போது ஒரு கலைக்குழு துவக்கியது. அந்த ஊரில் ஆணும் பெண்ணும் பேசுவதே அபூர்வமாக இருந்த நேரத்தில், மாணவிகளை மிகுந்த சிரமப்பட்டு கலைக்குழுவில் சேர்த்து, பல பல்கலைக்கழக போட்டிகளுக்கும் கல்லூரியின் சார்பில் எங்கள் கலைக்குழு சென்று வெற்றிகள் பெற்றது. கலைக்குழு துவங்கியபோது, அதை "கடலை"க்குழு என்று கேலி செய்தவர்கள் பலர். ஆனால் அவர்களே பின்னால் அதற்காக வருத்தம் தெரிவித்தது.

எனக்கு நியாயம் என்று பட்டதை தயங்காமல் எல்லா இடத்திலும் சொல்லுவேன். இது எனக்கு பல இடைஞ்சல்களைத் தந்தாலும் இன்று வரை நான் இதிலிருந்து மாறவில்லை. இதையும் பெருமையாக நினைக்கிறேன்.

என்னைப் பற்றி யாராவது தவறாகப் புரிந்து கொண்டால், கண்டிப்பாக அவருக்கு நான் என் தரப்பு நியாயத்த்தை விளக்குவேன். அவர் தரப்பு நியாயத்தையும் புரிந்து கொள்ள முயற்சிப்பேன். இதனால் பெரும்பாலும் பிரச்சனைகள் சுலபமாக தீர்ந்துவிடும். இதனால் பணியிடத்திலும் சரி, நண்பர்கள் வட்டத்திலும் அவர்கள் பிரச்சனையை என்னால் தீர்த்துவைக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது.

இது தவிர நான் எப்போதும் நினைத்து பெருமைப் படும் எனது நண்பர்கள், குடும்பம். இந்த இரண்டு விஷயத்திலும் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.

அப்பாடி ஒருவழியா என்னைப் பத்தி 8 விஷ்யம் சொல்லிட்டேன். இப்போ நான் அழைக்கும் எட்டு பேர். (எட்டு ரொம்ப அதிகம்)

1. துளசி டீச்சர்.
2. குமரன்
3. ஜெஸிலா
4. மோகன் தாஸ்
5. தம்பி
6. அபி அப்பா
7. கொங்கு ராசா
8. வெட்டி

விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

Tuesday, June 12, 2007

அர்ஜுனன் தவம்

பல்லவர் பூமி -3

ஐந்து ரதங்கள் பார்த்து விட்டு அங்கிருந்து அர்ஜுனன் தவம் பார்க்க போனாம்.. ஒரு குன்றுக்கு பக்கத்தில இறக்கிவிட்டு மேல ஏற சொல்லிட்டாங்க.... நண்பகல் உச்சி வெயில் 12 மணிக்கு ஏறணுமுன்னு நினைக்கும் போதே சோம்பலாயிடுச்சு. இருந்தாலும் கூட வந்த வெளிநாட்டு அண்ணாத்தே பாக்கணுமுன்னு சொன்னதால, ஏற வேண்டியதாப் போச்சு......

மேலே ஏறும் பாதையை படத்தில் பாருங்க..... மரங்களுக்கு நடுவில் தெரிவது தான் பல்லவர் காலத்தின் கலங்கரை விளக்கம்.
மேல ஏறும் பாதையில் மகிஷாசுர மர்தினி சிற்பங்கள் இருக்கு... அதுக்கு மேல பல்லவர் காலத்தில் கட்டின கலங்கரை விளக்கமும், பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் கட்டின கலங்கரை விளக்கமும் இருந்தது... படத்தை பாருங்க.....




இதுதான் மகிஷாசுர மர்தினி சிற்பங்கள் இருக்கும் இடம்












இதுதான் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம்.... வெயில் அதிகம் இருந்ததால மேலே ஏறவில்லை.










இது ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம். ஆனால் இப்போ இதுவும் உபயோகத்தில் இல்லை.







இதைத் தாண்டி கீழே இறங்கும் வழி முழுவதும் சிற்பங்கள் நிறைய இருக்கு. ஒரு குன்று முழுவதும் சிற்பங்கள் செதுக்கி இருக்காங்கன்னா அந்த காலத்தில் சிற்பக்கலை எவ்வளவு சிறந்து விளங்கியிருக்க வேண்டும்... நினைச்சு பார்க்கவே ஆச்சரியமா இருக்கு... இப்பவும் கூட மாமல்லபுரத்தில் உளி சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு.....

இதைப் பற்றி பேசிக்கிட்டே கீழே இறங்கினோம்.. அங்க ராயர் மண்டபம் இருக்கு. அதைப் பற்றி கேட்டால் மக்கள் உடனே சொல்லுவது தளபதி பற்றிதான்..... பல்லவர் காலத்து தளபதியில்லை........ நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்ச தளபதி படம்....... இங்கதான் ராக்கம்மா கையத்தட்டு பாட்டு எடுத்தாங்களாம்.... ஆஹா என்ன ஒரு சரித்திரப் புகழ் பெற்ற தலம்......................ராயர் பற்றி கேட்டா ரஜினி பத்தி சொல்லுறாங்க....என்னத்த சொல்ல....








பின்னர் கீழே கிருஷ்ணனின் வெண்ணை பந்து இருக்கு.... ஒரு பெரிய உருண்டையான பாறை... இன்னோரு பாறை மேல் எந்த பிடிப்பும் இல்லாம இருக்கு.... இதைத் தான் கிருஷ்ணரின் வெண்ணை உருண்டைன்னு சொல்லுறாங்க....



சரி அர்ஜுனன் தவமுன்னு சொன்னாங்களே அதைக் காணோமேன்னு கேட்டா வண்டி நிறுத்திய இடத்துக்கிட்டயே இருக்குன்னு சொன்னாங்க... வெளில வந்து பார்த்தா உண்மையிலேயே மலைச்சு போயிட்டேன்......அந்த பாறையின் பக்கம் முழுவதும் சிற்பங்கள் செதுக்கிருக்காங்க...... படங்களைப் பாருங்க...






இதுல அர்ஜுனனை தேடி இந்த படத்தில் தலைக்கு மேல் கையை வெச்சு தவம் பண்ணுபவர்தான் அர்ஜுனன்னு நினைச்சேன்....














அவர் இல்லை இந்த படத்தில் தவக்கோலத்தில் இருப்பவர்தான்னு சொன்னாங்க..... சரியான்னு தெரியலை... தெரிஞ்சவங்க சொல்லுங்க.....









(தொடரும்)

பல்லவர் பூமி - 1. மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்கள்
பல்லவர் பூமி-2 ஐந்து ரதங்கள்

Thursday, May 31, 2007

பல்லவர் பூமி-2 ஐந்து ரதங்கள்

ஐந்து ரதங்கள்...இவை காலத்தால் கடற்கரைக் கோவில்களுக்கு முந்தியவை என்றாலும் நன்றாகப் பராமரிக்கப்பட்டு இருக்கின்றன.... இதில் இருக்கும் ஒவ்வொரு ரதமும், வித விதமான கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டிருக்கின்றன....படங்களைப் பாருங்கள்........

திரெளபதி ரதம்

திரெளபதி

அர்ஜுனன் ரதம்

பீமன் ரதம்

தர்மன் ரதம்
நகுல - சகாதேவ ரதம்
தகவல் பலகை
சிங்கம்
யானை
நந்தி... நானும் இதை தனியா படமெடுக்க ரொம்ப நேரம் காத்திருந்தேன். ஆனா மக்கள் விடலை. சரிபோகட்டுமுன்னு நந்தி முகத்தை மட்டும் எடுக்கலாம்னு முயற்சி பண்ணினேன். கரெக்டா இந்த வாண்டு குறுக்க வந்துட்டான். :(
மேலும் சில படங்கள்





தொடரும்.....

Wednesday, May 23, 2007

பல்லவர் பூமி - 1. மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்கள்

சமீபத்தில் மாமல்லபுரமும் காஞ்சிபுரமும் போக சந்தர்ப்பம் கிடைத்தது. நல்ல இனிய அனுபவம். போன முறை மாதிரியில்லாம நிறைய படங்களும் எடுத்தேன். அப்புறம் எதுக்கு சும்மா இருக்கணும் பதிவு போடவேண்டியதுதானே.....இதோ முதல் பகுதி.

முதல்ல நான் போனது கடற்கரைக் கோவிலுக்கு. பேருதான் கோவிலே தவிர இப்போ இது கோவில் இல்லை. ஒரு புராதன சின்னமாதான் இருக்கு.

கோவிலுக்கும், ஐந்து ரதங்களுக்கும் டிக்கெட் வாங்கணும். நம்ம ஆட்களுக்கு ரூ.10. வெளிநாட்டினருக்கு USD 5 or ரூ.250. எங்களோட ஒரு வெளிநாட்டு அண்ணாத்தேயும் வந்திருந்தாரு. சரின்னு அவருக்கு 5 டாலர் கொடுத்தா வாங்க மாட்டேன்னுட்டாங்க... 250 தான் தரணுமாம். முதல்ல எனக்கு புரியலை. அப்புறம் வீட்டுக்கு வந்து இணையத்தில் பார்தப்போதான் புரிஞ்சது. 5 டாலர் இன்னிக்கு தேதிக்கு ரூ.203 தான். என்னத்த சொல்ல..... சரி கோவிலைப் பார்ப்போம்.

மாமல்லபுரத்தில் வித விதமான சிற்பக்கலைகள் இருக்கு. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், மலையைக் குடைந்து செதுக்கப்பட்ட சிற்பங்கள். இப்படி பல, இந்த கடற்கரைக் கோவில்களில் உள்ளவை பெரும்பாலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்

இங்க இருப்பது ரெண்டு கோவில்கள். படத்தில பார்த்தா ரெண்டு கோபுரங்கள் தெரியும். பெரிய கோபுரம் கடல் பார்த்து கிழக்கு நோக்கி இருக்கு.

இங்கே இருப்பது தாராலிங்கம் என்னும் லிங்கம். இது ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட கடப்பா கல்லினால் ஆன பட்டைகளை வைத்து உருவாக்கப் பட்டது. இது 8 அடி உயரத்தில் இருந்ததாம். இப்போ மேல் பாகம் உடைந்து இருக்கு. ஏதோ ஒரு போரில் சிதைக்கப்பட்டதாக சொல்லுறாங்க... ..













இந்த கோவில் வரை கடல் இருந்திருக்கு. 1984-ல் இந்திய பிரதமர் உத்தரவின் படி ஒரு கல் சுவர் அமைத்து கடலை தடுத்து இருக்காங்க... படத்தில பாருங்க






இந்த கோவிலுக்கு பின்புறம் ஒரு பெருமாள் சன்னதி இருக்கு. பள்ளி கொண்ட பெருமாள். இவர் ஒரே கல்லினால் ஆனவர். இவருக்கு நேர் கோட்டில் வெளியே ஒரு சிங்கமும், பலியிடப்பட்ட மானின் சிற்பமும் இருக்கு. இவைகளும், பெருமாளும் ஒரே கல்லினால் ஆனதாம். அதாவது உள்ளே இருக்கும் பெருமாளை செதுக்கிய அதே கல், வெளியே வரை நீண்டிருக்கு, அதிலேயே சிங்கமும், மானும் இருக்கும் பீடம் செதுக்கப் பட்டு இருக்கு. கேக்கவே பிரமிப்பா இருக்கு. எவ்வளவு திட்டமிட்டு இதை செய்து இருக்கணும். அசாதாரணமான கற்பனை வளம். சிங்கமும், பலியிடப்பட்ட மானும் கீழே இருக்கு பாருங்க..


இதுக்கு பின்னால் சிறிய கோபுரத்தை உடைய சோமஸ்கந்தர் சன்னதி இருக்கு.அவரை கதவின் ஓட்டை வழியா படம் எடுத்தேன். குடும்பத்தோடு இருக்கார். இந்த சிறிய கோபுரம் கடப்பா கல்லினால் கட்டப்பட்டு இருக்கு. இதுக்கு முன்புறம் ஒரு மண்டபம் இருந்திருக்கு, இப்போ அதன் அடித்தளம் மட்டும் இருக்கு.




அது மட்டுமில்லாமல் ரெண்டு பளிங்கு தூண்களும் இருந்திருக்கு. இப்போ வெறும் அடிப்பகுதி மட்டும் தான் இருக்கு. படத்தைப் பாருங்க...









கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர் இருந்திருக்க வேண்டும், அதன் மேல் நந்திகள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். இப்போ சில சிதைந்த நந்திகளை மட்டும் வெச்சிருக்காங்க...








கோவிலுக்கு வெளியே அகழ்வாராய்சி செய்யும்போது, இந்த இடத்தை கண்டு பிடிச்சிருக்காங்க.

இது ஆதிவராகர் சிலை. பன்றி முகம், யானை உடல், காளையின் கால்களைக் கொண்டது. பக்கத்திலேயே ஒரு தூணும், ஊற்றும் இருக்கு. இந்த ஊற்று தண்ணீர் சுவையாக இருக்குமாம்.

பல்லவர்காலத்தில இருந்த சிற்பக்கலை வளர்ச்சிக்கு இந்த கோவில் நல்ல சான்று. கடலுக்கு பக்கத்தில் இருப்பதால கொஞ்சம் சிதைஞ்சிருந்தாலும், நல்ல பாதுக்காப்பா பராமரிக்கிறாங்கன்னுதான் சொல்லணும். இதுமாதிரி 7 கோவில்கள் இருந்ததாகவும் இது 6வது கோவில். 5வது கோவிலின் அடித்தளம் சுனாமியினால் வெளியே வந்திருப்பதாகவும் சொன்னாங்க....

கோவில் வரலாறு சொல்லும் தகவல் பலகை


மேலும் சில படங்கள்






தொடரும்