Friday, December 28, 2007

கொஞ்சம் சீரியஸ்…..கொஞ்சம் காமெடி

நேற்று மாலை பேநசீர் புட்டோ சுட்டுக் கொல்லப்பட்டார். இது எல்லாருக்கும் தெரியும். ஆனா 5:30 மணிக்கு காரில் ஏறும்போது அவர் நினைத்திருப்பாரா இன்னும் 5 நிமிடத்தில் இற்க்கப்போவதை. சிரித்துக் கோண்டே அவர் படியில் இறங்கி வருவதை பார்க்கும் போது மனசுக்குக் நொன்ப கஷ்டமாக இருந்தது. என்ன பண்றது, மனுஷனோட வாழ்க்கை இப்படித்தானே இருக்கு. எப்போ என்ன நடக்குமுன்ண்னு யாருக்கும் தெரியாது. இது ஒரு வகையில நல்லதுன்னும் நினைக்கிறேன். ஒருவேளை தெரிஞ்சா வாழ்க்கை சுவையா இருக்காதுன்னு தோணுது. ரஜினி சொன்ன மாதிரி சாகற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாயிடும்.


சரி சீரியஸ் விஷயம் போதும். காமெடிக்கு வருவோம். சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படிச்சேன். படிச்சதும் எனக்கு சிரிப்புதான் வந்தது. என்ன தெரியுமா, நிலாவில் நிலம் வாங்கறதுதான். (நிலவில் நிலம்... கவிதையா இருக்கே... இதையே தலைப்பா வெச்சிருக்கலாமோ?)


இப்போ அமெரிக்காவில் இது ரொம்ப தீவிரமா நடக்குதாம். இணையத்தில் தேடிப் பார்த்தபோது இது ரொம்ப காலமா நடக்குறது தெரிய வந்தது. ஒரு ஏக்கர் $25 தான். சென்னையில் நிலம் வாங்குவதை விட ரொம்ப ரொம்ப மலிவு. நீங்க நிலம் வாங்கினா, அதுக்கான பட்டா, உங்க நிலத்தோட போட்டோ எல்லாம் தராங்களாம்.

இந்த இணையதளம்தான் அதிகார பூர்வ விற்பனையாளராம்.

யாரு இவங்களுக்கு அதிகாரம் குடுத்ததுன்னுதான் தெரியலை. நமக்கு சொந்தமான இடத்தைத் தானே நாம விற்க முடியும். இவங்க நிலாவில் இருக்கும் இடத்தை விற்கிறாங்களே.. அப்படின்னா மொத்த நிலாவும் இவங்களுக்கு சொந்தமாயிடுச்சா? அப்படின்னா இவங்களுக்கு யாரு நிலாவை வித்தது? இவங்களை மாதிரியே இன்னும் நிறைய பேரு விக்கிறாங்களே...அவங்களுக்கும் அதே நிலா சொந்தமா? எனக்கு எதுவும் புரியலை சாமி.




Friday, December 21, 2007

பேசுகிறேன் பேசுகிறேன்


பேசுகிறேன் பேசுகிறேன்

உன் இதயம் பேசுகிறேன்

புயல் அடித்தால் கலங்காதே -

நான் பூக்கள் நீட்டுகிறேன்


எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா....



கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

இளைப்பாற மரங்கள் இல்லை

கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ


முற்றுப்புள்ளி அருகில் நீயும்

மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்

முடிவென்பதும் ஆரம்பமே....


வளைவில்லாமல் மலை கிடையாது

வலியில்லாமல் மனம் கிடையாது

வருந்தாதே வா.....

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..


காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்

தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை

தன்னைக் காக்கவே தானாய் வளருமே


பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்

பெண்ணே கொஞ்ச நேரம்தானே

உன்னைத் தோண்டினால்

இன்பம் தோன்றுமே


விடியாமல்தான் ஓர் இரவேது

வடியாமல்தான் வெள்ளம் கிடையாது

வருந்தாதே வா...

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..


படம் : சத்தம் போடாதே

பாடல் : நா. முத்துக்குமார்

இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் : நேஹா பேசின்



சமீபமாக வந்த பாடல்களில் எனக்கு பிடித்தவற்றை உங்களோட பகிர்ந்துக்கலாமுன்னு நினைச்சேன். அதன் முதல் படி தான் இது. இந்த பாடலின் வரிகளுக்காகவே என்னைக் கவர்ந்த பாடல் இது..


பாட்டைக் கேட்க இங்க போகலாம்...

புகைப்படம் : http://outdoors.webshots.com/photo/2272177600087250223wWnUDC