Friday, December 21, 2007

பேசுகிறேன் பேசுகிறேன்


பேசுகிறேன் பேசுகிறேன்

உன் இதயம் பேசுகிறேன்

புயல் அடித்தால் கலங்காதே -

நான் பூக்கள் நீட்டுகிறேன்


எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா....



கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

இளைப்பாற மரங்கள் இல்லை

கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ


முற்றுப்புள்ளி அருகில் நீயும்

மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்

முடிவென்பதும் ஆரம்பமே....


வளைவில்லாமல் மலை கிடையாது

வலியில்லாமல் மனம் கிடையாது

வருந்தாதே வா.....

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..


காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்

தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை

தன்னைக் காக்கவே தானாய் வளருமே


பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்

பெண்ணே கொஞ்ச நேரம்தானே

உன்னைத் தோண்டினால்

இன்பம் தோன்றுமே


விடியாமல்தான் ஓர் இரவேது

வடியாமல்தான் வெள்ளம் கிடையாது

வருந்தாதே வா...

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..


படம் : சத்தம் போடாதே

பாடல் : நா. முத்துக்குமார்

இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் : நேஹா பேசின்



சமீபமாக வந்த பாடல்களில் எனக்கு பிடித்தவற்றை உங்களோட பகிர்ந்துக்கலாமுன்னு நினைச்சேன். அதன் முதல் படி தான் இது. இந்த பாடலின் வரிகளுக்காகவே என்னைக் கவர்ந்த பாடல் இது..


பாட்டைக் கேட்க இங்க போகலாம்...

புகைப்படம் : http://outdoors.webshots.com/photo/2272177600087250223wWnUDC

4 comments:

Anonymous said...

Hi sir,

Neenda naatkalukku piragu paatudan post potrukinga.adutha innings ku ready mathiri theriyuthu.

Sothanai comments ellam podalya??!!

- Ani

ப்ரசன்னா said...

hey thanks for your continuous support. Idhukku sodhanai kidayadhu.

adhutha innings konjam differenta irukkanumnnu yosichittu irukken. adthan edho paatu pottu samalichirukken. idhu konja nalaikku thodarum. More songs are on the way, until i get some good idea and time

Thiyagarajan said...

Sir, I'm eagerly waiting for your next innings.

ப்ரசன்னா said...

Thanks thiyagu, really happy to see so many people are waiting for me to write. "Pullarikkudhu"